நினைவில் நிற்கும் நாள்-10.4.2004: புலிகளால் மேற் கொள்ளப் பட்ட வாகரைப் படுகொலையும் பாலியற் கொடுமைகளும்

(இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்)

துரியோதன சகோதரர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் பகிரங்கமான கூட்டத்தின் நடுவே திரவுபதியின் ஆடையை அவிழ்த்து அவளை அவமானம் செய்கிறார்கள். அதைத் தொடர்ந்து மகாபாரதப் போர் வருகிறது. இராவணன் சீதையைக் கடத்திச் சிறைவைத்ததால் இராமாயண யுத்தம் வருகிறது. இவை இதிகாசங்கள்.ஆண்களால் எழுதப் பட்டவை.ஆனாலும் பெண்களைப் பாலியற் கொடுமைகளுக்கு ஆளாக்கினால் அதன் விளைவாக அழிவுகள்,மாற்றங்கள், புதிய சிந்தனைகள் என்பன பிறக்கின்றன என்பது மேற்குறிப்பிட்ட கதைகளிலிருந்து தெரிய வருகின்றன.