அம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கையிலிருந்து விலக விரும்புகின்றது இலங்கை

(புளும்பேர்க்)

(தமிழில்- ரஜீபன்)

இலங்கையின் தென்பகுதியில் உள்ள அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்து சீனாவுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையிலிருந்து விலகுவதற்கு கோத்தபாய ராஜபக்ச தலைமையிலான புதிய அரசாங்கம் விரும்புகின்றது. தேசிய நலன்களை கருத்தில்கொண்டே புதிய அரசாங்கம் உடன்படிக்கையிலிருந்து விலகுவதற்கு ஆர்வமாகவுள்ளது.