ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணம் முஸ்லிம் கல்லூரி வீதியும் நாவலர் வீதியும் இணையும் புதுப்பள்ளிச் சந்தியில் முஸ்லிம்களின் வெள்ளிக்கிழமை ஆராதனையின் பின்னர் யாழ் முஸ்லீம் சமூகத்தினால் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த ஆர்ப்பாட்டமானது, யாழ் முஸ்லிம் சமூகத்தினால் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும், அவ்வமைப்பால் மேற்கொள்ளப்பட்ட ஏப்ரல் 21 தாக்குதலுக்கு கண்டனம் வெளியிட்டும், குறித்த தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் அதே சமயம் குறித்த நடவடிக்கைகளில் ஈடுபட்ட அனைவர் மீதும் அரசை சட்டத்தின் மூலம் தண்டணையை வழங்கக் கோரியுமே, முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்படடத்தில் ஈடுபடடவர்கள், நாட்டில் தற்போது உருவாகியுள்ள ஐ.எஸ் தீவிரவாதம் முற்றாக அழிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர்..