ஐ.தே.மு இறுதித் தீர்மானம்

நாட்டில் நிலவும் அரசியல் பிரச்சினை தொடர்பில், இன்று (03) இரவு, ஜனாதிபதியைச் சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர், மீண்டும் இது விடயத்தில் ஜனாதிபதியைச் சந்திக்கப்போவதில்லையென, ஐக்கிய தேசியக் கட்சி அடங்கலான ஐக்கிய தேசிய முன்னணி தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த, ஐ.தே.மு.வின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், இந்த வாரத்துக்குள் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டுமென்றார். அவ்வாறாக, இந்த வாரத்துக்குள் இறுதித் தீர்மானமொன்று வழங்கப்படவில்லையாயின், மாற்று வழி தொடர்பில் சிந்திக்கவேண்டி ஏற்படுமெனவும், அவர் மேலும் கூறினார்.