சிறுவர் தினம்…ஆசிரியர் தினம்

இன்றைய ஆசிரியர் தினத்தில் நிலாவெளி ஶ்ரீ சித்திவிநாயகர் ஆலய அறநெறிப் பாடசாலையில் மாணவர்களின் வாழ்வியலுக்கான அறத்தினை நெறிப்படுத்துகின்ற, தன்னலமற்ற சேவையை வழங்குகின்ற ஆசிரியர்களுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்ததோடு..ஐப்பசி 01ம் திகதி கடந்து சென்ற சிறுவர் தினத்தினை சிறப்பிக்கும் முகமாகவும், இன்று குழந்தைச்செல்வங்களுடன் இணைந்திருந்து கொண்டாடியதில் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். இச்சந்தர்ப்பத்தில் எமது தமிழர் சமூக ஜனநாயகக்கட்சியின் திருகோணமலை மாவட்டச்செயலாளரும், நகரசபை உறுப்பினரும் ஆகிய சத்தியன் அவர்களும் கலந்துகொண்டார்.