நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 7 பேரை சிறைப்பிடித்த இலங்கை கடற்படை

சிறைப்பிடிக்கப்பட்ட 7 மீனவர்களும் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.7 மீனவர்கள் மீதும் இலங்கை கடல் பகுதியில் எல்லை தாண்டி நுழைந்து மீன்பிடிக்கும் வெளிநாட்டுப் படகுகளுக்கு அபராதம் மற்றும் தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து யாழ்ப்பாணம் சிறையில் மீனவர்கள் அடைக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.