மேய்ச்சல் தரை இல்லாததால் மடியும் ஆபத்தில் கால்நடைகள்

கிளிநொச்சி கோணாவில் கிராமத்தில் மாடுகள் வளர்ப்போர் அவதி. கிளிநொச்சி கோணாவில் பிரதேசத்தில் சுமார் 500 மாடுகள் வரை வளர்த்து வரும் கால்நடை வளர்ப்பாளர் ஒருவர் தனது மாடுகளை இனிமேல் வளர்க்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், அடுத்து வரும் மூன்று மாதங்களுக்கு மாடுகளை மேய்ச்சலுக்காக எங்கு கொண்டு செல்வது என்று தெரியாதுள்ளதாகவும் தெரிவித்தார்.