வவுனியாவில் 510 பேருக்கு டெங்கு காய்ச்சல்

தங்களது இருப்பிடங்கள் பகுதிகளை தூய்மையாகவும், சுத்தமாகவும் துப்பரவு செய்து வைத்திருக்குமாறும் பொது சுகாதாரப்பரிசோதகர்களின் டெங்கு ஒழிப்பு செயற்திட்ட நடவடிக்கைக்கு பொது மக்கள் பூரண ஒத்துழைப்புக்களை வழங்குமாறு வவுனியா பொது சுகாதாரப்பரிசோதகர் க.தியாகலிங்கம் தெரிவித்துள்ளார்.

இவ்வருடம் முதல் இன்று வரையான காலப்பகுதிவரையும் வவுனியாவில் டெங்கு தொற்று ஏற்பட்டு 510பேருக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது பெய்துவரும் பருவ மழையினால் டெங்கு நுளம்புகள் பெருகும் அபாயம் காணப்படுகின்றது.

குருமன்காடு, காளிகோவில், பூங்கா வீதி போன்ற பகுதிகளில் தற்சமயம் நுளம்புகள் பெருகும் இடமாக அடையாளம் காணப்பட்டு அதற்கான செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஏனைய பகுதிகளில் நுளம்பு பெருக்கம் பகுதியளவில் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையும் காணப்படுகின்றது. எனினும் தற்பொழுது பெய்துவரும் பருவ மழையினால் டெங்கு நுளம்புகள் பெருகும் நிலையும் மேலும் காணப்படுகின்றன.

கடந்த 13.09.2019 அன்றிலிருந்து டெங்கு நுளம்பு தொற்று உள்ளூர் தொற்றுக்கள் அதிகளவில் ஏற்பட்டுள்ளது. இவ்வருடம் முதல் இன்று வரையான காலப்பகுதிவரையும் 510பேருக்கு டெங்கு நுளம்பு தொற்று ஏற்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.

நாளைய தினம் பொலிசாருடன் இணைந்து நகரில் டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் பார்வையிடப்பட்டு பெருக்கெடுக்கும் இடங்கள் அவதானிக்கப்பட்டால் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

தமது இருப்பிடங்கள், திணைக்களங்கள், அரச, தனியார் நிலையங்கள், விடுதிகள் அனைத்தையும் சுத்தம் செய்து துப்பரவாகவும், தூய்மையாகவும் வைத்திருக்குமாறும் பரிசோதனை மேற்கொள்ள செல்லும் பொது சுகாதாரப்பரிசோதகர்களுக்கு பூரண ஒத்துழைப்புக்களை வழங்குமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share1