இந்திய ஜம்மு – காஷ்மீரும் இலங்கை வடக்கு கிழக்கும்

(சாகரன்)

இந்தியாவில் இருந்து துண்டாடப்பட வேண்டும் என்று பல தசாப்பங்களாக போராடி வரும் காஷ்மீர் என்று பலராலும் அழைக்கப்படும் ஜம்மு – காஷ்மீர் இன்று தனக்குள் இரண்டாக துண்டாடப்பட்டிருக்கின்றது. இலங்கையில் ஈழம் என்று பலராலும் அறியப்பட்ட வடக்கு – கிழக்கு தமிழர் பிரதேசம் எவ்வாறு இலங்கையில் இருந்து துண்டாடி வெளியேற முற்பட்டு இன்று வடக்கு, கிழக்கு என்று தனக்குள் துண்டாடப்பட்டிருக்கின்றதோ என்பதை தற்போதைய காஷ்மீர் நிலமை எனக்குள் ஞாபகப்படுத்தி நிற்கின்றது.