இன ரீதியான அரசியலைக் கைவிட்டு, தேசிய அரசியலின் பக்கம் தமிழ் மக்கள் திரும்புகிறார்களா?

(எம்.எஸ்.எம். ஐயூப்)

கடந்த ஐந்தாம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகள் பெற்ற ஆசன எண்ணிக்கையைப் பற்றியும் அது எதைக் காட்டுகிறது, அதன் விளைவுகள் எவ்வாறு அமையும் என்பவற்றைப் பற்றி, ஊடகங்களில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதில் பிரதானமாக, தமிழ்க் கட்சிகளின் பிரதான கூட்டணியாகக் கருதப்பட்டு வந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நிலைமையைப் பற்றியே, பிரதானமாக ஆராயப்பட்டு இருந்தன.