“கர்நாடகா… தண்ணீர் தாருங்கள்…”

1960.

இப்போ நடக்கும் இதே பிரச்சனை….

“கர்நாடகா… தண்ணீர் தாருங்கள்…”

தமிழக முதல்வர் காமராஜர் கேட்கிறார்
கர்நாடக முதல்வர் நிஜலிங்கப்பாவிடம்.

அப்போதும் இல்லை என்ற பதில்.

என்ன செய்வது ?

பிரதமர் நேருவிற்கு
போன் செய்கிறார் காமராஜர் .

நேரு கூறுகிறார் :

“நான் பிரதமர். மாநில உரிமையில் உரிமையில்
நான் தலையிடக் கூடாது.
ஆனால் ஒரு வழி சொல்கிறேன்…
இப்போது கர்நாடகாவில் தொழிற்சாலைகள்
வளர்ந்து வருவதால், அவர்களுக்கு மின்சாரம் தேவை. நெய்வேலியில் கிடைக்கும் மின்சாரத்தைக் கொடுத்து
நீரைப் பெற்று கொள்ளுங்கள்…”

அதன்படியே செய்து செய்து மதுரைக்கு
தண்ணீரைக் கொண்டுவருகிறார் காமராஜர் .

‘இப்படியே 25% விகித மின்சாரத்தைக் கொடுத்தால்
தமிழ்நாடு பற்றுக்குறையை சந்திக்க நேரிடுமே?
என்ன செய்யலாம்?’

யோசித்த காமராஜர்
கர்நாடகாவின் தண்ணீரைக் கொண்டே
குண்டா நீர்மின் திட்டத்தை நிறைவேற்றுகிறார்.

வைகை டேம் தான் அது …
அதைகொண்டு கர்நாடகாவுக்கு கொடுத்த
மின்சாரத்தையும் உற்பத்தி செய்துவிடுகிறார்.

வைகை டேம் கட்ட இருபுறமும்
மலைகள் இருக்கும் இடமாயிருந்தால் நல்லது
என வல்லுநர் குழு கூறியது.
ஆனால் மலைக்கு எங்கே போவது?

பொறியாளர் தாமஸை அழைத்து.
“மலை இல்லை என்றால் பரவாயில்லை.
நீ தைரியமாகக் கட்டு” என்கிறார்.

தாமசும் கட்டி முடிக்கின்றார்.

மொத்தம் ஒதுக்கப்பட்ட நிதி 2.75 கோடி ரூபாய்.

ஆனால் இரண்டு கோடியில் முடிக்கப்பட்டு
75 லட்சத்தை அரசுக்குத் திருப்பி தருகிறார் தாமஸ்.

அந்தத் தொகையை
தாமசிடமே திரும்பக் கொடுத்து…

“டேமைச் சுற்றி அழகான பூங்கா ஒன்றைக் கட்டி,
செயற்கையான நீருற்றுகளை
உருவாக்கி அழகூட்டுங்கள். அந்த இடத்தை
சினிமாப் படப்பிடிப்புகளுக்கு வாடகைக்கு விடுங்கள் .
அந்தத் தொகை அணைக்கட்டுப் பராமரிப்பு செலவுகளுக்குப் போதுமானதாக இருக்கும்”
என்றார் தமிழக முதலமைச்சர் காமராஜர்.

இதுதான் அரசியல் நிர்வாகம்…
இதுதான் வளர்ச்சிக்கான
தொலைநோக்குத் திட்டம்.

(மூர்த்தி மேனகா பதிவிலிருந்து.)