கொவிட் கதையாடல்-2: பெருந்தொற்றின் பின் உள்ளூராட்சிகளின் எதிர்காலம்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

இந்தப் பெருந்தொற்று, இலட்சக்கணக்கான மக்களின் உயிர்களைக் காவு கொண்டிருக்கிறது.

இந்நோய்த்தொற்று பரவத் தொடங்கியது முதல், இதைத் தடுப்பதற்கு பாடுபட்டவர்கள், மிகவும் சாதாரண பணிகளில் ஈடுபட்டிருக்கும் மக்களாவர். மருத்துவர்கள், தாதியர், மருத்துவத் துறை சார் பணியாளர்கள் என்போர் முக்கியமானவர்கள். இன்றும் நாம் பத்திரமாக இருப்பதற்கு காரணம் அவர்களைப் போலவே இன்னும் எத்தனையோ துறைகள் தொடர்ச்சியாக இடைவிடாது பணியாற்றியமையாகும்.