ஜெனீவாவுக்குப் பிறகு, எங்கே கையேந்துவது?

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

கடந்த பத்தாண்டுகளாக, ஈழத்தமிழ் அரசியலின் மையப்புள்ளிகளில் ஒன்றாக ஜெனீவா இருந்துவருகின்றது. ஒருபுறம் இலங்கையில் இருந்து பிரமுகர்கள் அங்கு காவடியெடுக்க, ‘புலம்பெயர் புத்திமான்கள்’ நடைபவனி, பேரணி, ஈருளிப் பயணம் என ஐரோப்பியத் தலைநகரங்களில் இருந்து, ஜெனீவாவை நிறைத்தார்கள்.