தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் பத்திரிகை அறிக்கை

பத்திரிகைகளுக்கானஅறிக்கை– 06-10-2018
வடக்குமாகாணமும் கிழக்குமாகாணமும் கொண்டிருந்ததமிழர்களின் நிலத் தொடர்ச்சியை இல்லாதுசெய்யும் திட்டமிட்டநோக்குடனேயேமுன்னர் வெலிஓயாஎனஆரம்பிக்கப்பட்டஅரசின் திட்டமிட்டசிங்களகுடியேற்றத்திட்டம்மேற்கொள்ளப்பட்டது. இந்தவிடயம் யுத்தத்தின் காரணமாகஅரசினால் தொடரமுடியாமற் போய்விட்டது. இப்பொழுதுதிருகோணமலை,முல்லைத்தீவுமற்றும் வவுனியாஆகியமாவட்டங்களின் கணிசமானஅளவுநிலப் பகுதிகளைஒருங்கிணைத்தவகையில் ஓருவிரைந்ததிட்டமிட்டசிங்களக்குடியேற்றம் நடைபெற்றுவருவதுஅனைவரும் அறிந்ததே. இந்தப் பகுதிகள் அரசின் குடியியல் நிர்வாகங்களின் கீழில்லாமல் அரசபடைகளின் கட்டுப்பாட்டிலேயேஉள்ளன.

1983க்கு முதல் ஒருசிறியஅளவிலேயேசிங்களவர்கள்வெலிஓயாதிட்டத்தில் குடியேற்றப்பட்டிருந்தனர். ஆனால் 2009க்குப் பின்னர் அரசபடையினரின் பாதுகாப்புடனும் துணையுடனும் மிகப் பெருந் தொகையில் தென்னிலங்கைமாவட்டங்களிலிருந்துசிங்களவர்கள் அழைத்துவரப்பட்டு,தேவையானஉதவிகள் அனைத்தையும் அரசுவழங்கிவிவசாயமற்றும் குடியிருப்புநிலஉறுதிப் பத்திரங்களையும் கொடுத்துகுடியேற்றப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதன் முழு விபரங்களையும் பெறமுடியாதஅளவுக்குஅப்பகுதிகள் அரசபடைகளின் பாதுகாப்புவலயங்கள் போல் நிர்வகிக்கப்படுகின்றனஎன்பதும் உண்மை.
அப்பகுதிகளில் யாருக்கும் நிலம் வழங்கப்படவில்லை–வழங்கப்படமாட்டாதுஎன ஜனாதிபதிஅண்மையில் கூறியுள்ளார். அதனைஉண்மைஎனஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. ஜனாதிபதியின் தலைமையில் அமைந்துள்ளவடக்குகிழக்குமாகாணஅபிவிருத்திஒருங்கிணைப்புக் குழுவின் கடந்த கூட்டத்தில் ஜனாதிபதி,அப்பகுதிகளில் தமிழர்கள் சட்டப்படியாககொண்டிருந்தநிலங்கள் மீண்டும் அவர்களுக்குவழங்கப்படும் எனஉறுதியளித்திருக்கிறார்.குறிப்பிட்டதமிழர்கள் சட்டப்படிகொண்டிருந்தகாணிகள் அவர்களுக்குமீளவழங்கப்படுதல் என்பதுஒருவிவகாரமே. அதற்கும் மேலாக,
• அரசாங்கத்தின் பாரியஅரசஉதவியுடனானதிட்டமிட்டசிங்களக் குடியேற்றமும்,
• வடக்குகிழக்குமாகாணங்களின் தொடர்ச்சியை இல்லாமல் செய்வதுவும்,
• குறிப்பிட்ட மூன்றுமாவட்டங்கிளனதும் இணைந்தபெரும் நிலப்பரப்பைவடக்குகிழக்கிலிருந்துதுண்டாடிவடமத்தியமாகாணத்தோடு இணைக்கும் முயற்சிகளுமே
இவ்விடயத்தில் உள்ளபிரதானமானபிரச்சினைகளாகும்.
வடமத்தியமாகாணத்தில் காலம் காலமாகவிவசாயம் செய்துவந்துள்ளசிங்களவர்களில் நிலமற்றோர் தாங்களாகதங்களதுமாவட்டத்துக்குஅண்மித்தமாவட்டங்களைநோக்கிதமதுபொருளாதாரவாழ்வுக்காக இடம் பெயர்ந்துகுடியேறிகாட்டுநிலங்களைகளணிகளாக்கிதமதுஇருப்பைஅமைத்துக் கொள்வதுவேறுவிடயம். எனினும்,இவ்வாறானஒன்றைதமிழர்கள் மேற்கொள்கிறபோதுஅரசபடைகள் அனுமதிப்பதில்லை. அரசநிலங்களெல்லாம் அரசபடைகளுக்கும் சிங்களவர்களுக்குமேசொந்தமானவைஎன்பதுபோலஅரசபடைகள் நடந்துகொள்ளும் விடயத்தில் அரசாங்கம் தலையிடுவதுமில்லை.
அரசநிலங்களில் எந்தவொருதுண்டையேனும் எந்தவொருநபருக்குவழங்குவதாயினும் அதனைத் தீர்மானிப்பதுமாகாணசபையேஎன்பதுதான் இலங்கையின் அரசியல் யாப்புவழங்கியிருக்கும் அதிகாரம். ஆனால் இது மத்தியஅமைச்சர்களாலும் மதிக்கப்படுவதில்லை. எந்தவொரு ஜனாதிபதியாலும் இதுவரைமத்திக்கப்படவில்லை. தமிழ்த் தேசியக் கூட்மைப்பினரும் சரிமாகாணசபைகளும்; சரிஅதுபற்றிஎந்தவொருகுரலையும் உரியஅரங்கங்களில் இதுவரைஎழுப்பியதில்லைஎன்பதுவும் குறிப்பிடத்தக்கது. இங்குஅடுத்துவரும் தேர்தல்களுக்கானவாக்குவேட்டைக்காகசிங்களக் குடியேற்றங்களுக்குஎதிரானவர்கள் போல் வீதிஅரசியல் நாடகங்களைஅரங்கேற்றுகிறார்களேதவிர,மாகாணசபைகளுக்குஅரசநிலங்கள் மீதுஅரசியல் யாப்புபூர்வமாகஉள்ளஅதிகாரங்களைநிலைநாட்டிதமிழர் பிரதேசங்களின் தனித்துவத்தைநிலைநாட்டுவதற்கானஎந்தவொருமுயற்சியும் தமிழர் தரப்பில் இருந்துமேற்கொள்ளப்படவில்லைஎன்பதுதுரதி~;டமானஒன்றாகும்.
• வடக்குகிழக்குமாகாணங்களின் தொடர்ச்சிபாதிக்கப்படாமல், இந்தமாகாணங்களின் நிலப்பரப்புகள் ஏனையமாகாணங்களுடன்எதிர்காலத்தில் இணைக்கப்படும் நிலைமைஏற்படவிடாமல் தடுப்பதுஅவசியம்.
• அதற்குஅரசியல் யாப்புபூர்வமாக இப்போதுள்ளமாகாணஎல்லைகள் மாற்றியமைக்கபடாமல் இருப்பதுஅவசியம்.
• மேலும்,பிரதேசசெயலகநிலப்பரப்புகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டமாகாணசபைகளின் அனுமதியில்லாமல் மாற்றியமைக்கப்படக் கூடாதுஎன்பதைஉறுதிசெய்தல் வேண்டும்.
• அத்துடன் அரசகாணிகளைவழங்குவதுதொடர்பாகஅரசியல் யாப்பின் 13வது திருத்தத்தில் மாகாணஆட்சிகளுக்குவழங்கப்பட்டுள்ளஅதிகாரங்களைநடைமுறையில் உறுதிப்படுத்துதல் வேண்டும்.
இதங்கானகோரிக்கைகளைபாராளுமன்றத்துக்குஉள்ளேயும் வெளியேயும்மற்றும் ஜனாதிபதிமற்றும் பிரமருடனானபேச்சுவார்த்தைகள் மூலமும் வலியுறுத்திஅரசுசட்டபூர்வமாக இவற்றைநடைமுறைப்படுத்துவதைதமிழர் தரப்புஉறுதிப்படுத்தவேண்டும் இதற்குதமிழர் தரப்பிலுள்ளஅனைத்துபிரதானமானஅரசியற் சக்திகளும்,அமைப்புரீதியானசமூகசக்திகளும் இணைந்துகாத்திரமாகசெயற்படுவதுகாலத்தின் அவசியமாகும்என்பதைவலியுறுத்துகிறோம்.
இதேவேளை, ஜனாதிபதியும்,பிரதமரும்,அமைச்சர்களும்,அத்துடன் அரசநிர்வாகமற்றும் அரசபடைகளின் அதிகாரிகளும் தமிழர்களின் பிரதேசங்களைசிங்களமயமாக்கமுயற்சிப்பது இந்தநாட்டில் அரசியல் அமைதியைநிலைநாட்டாது. அதுதேசியநல்லிணக்கம் மற்றும் சமூகங்களுக்கிடையிலானஒற்றுமைஆகியவற்றிற்குஎதிரானதுஎன்பதைஉணர்ந்துபோரினால் வலிகளைசுமந்துநிற்கும்தமிழ் மக்களுக்குஅரசின் மீதும் நாட்டின் சட்டங்களின் மீதும் நம்பிக்கையைவளர்க்கும் நடவடிக்கைகளைமேற்கொள்ளவேண்டும் என்றுகேட்டுக் கொள்கிறோம்.

இவ்வறிக்கையைவெளியிடுபவர்
அ. வரதராஜா பெருமாள்
கட்சிஅமைப்புசெயலாளர் – தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி
முன்னாள் வடக்கு-கிழக்குமாகாணமுதலமைச்சர்