தமிழ் நாடு இந்துவத்துவா ஆதிக்கத்திற்குள் உள்ளாகுமா….?

(சாகரன்)
தமிழ் நாட்டில் அண்மைக்காலமாக நடைபெறும் அரசியல் நிகழ்வுகள் மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியின் அதீத தலையீட்டில் ஒரு பொம்மை அரசு ஆட்சிசெய்கின்றதுல் என்பதை கட்டியம் காட்டி நிற்கின்றன.
மரணம் அடைந்த ஜெயலலிதாவின் மத்திய அரசுக்கு அடி பணியாத தன்னாட்சியைத் தொடர்ந்து இதற்கு பாடம் புகட்டல் என்பதில் இருந்து ஆரம்பமான இந்த ஆட்டம் அவரின் மர்ம மரணத்துடன் நின்று விடவில்லை. இந்த மர்ம மரணத்தின் முடிச்சுக்களும் சசிகலா போன்றவர்களின் கைதுகளும்.. தினகரனின் தனிவழியும்… பிரிந்து நின்று போர் கொடி தூக்கி தற்போது ஓபிஎஸ் ஈபிஎஸ் என்று இரட்டைக் குழல் வெற்றுத் துப்பாக்கி போல் பாஜகவின் விருப்ப அரசியலும் இதனை நிறுவியே நிற்கின்றன.

காவிரி நிதிப பங்கீடுபற்றிய உச்ச நீதி மன்றத் தீர்பை மதியாது காலக் கெடுவான 60 நாள்கள் வரை காத்திருந்து இறுதியில் நீதி மன்றத்திடமே மீண்டும் விளக்கம் கேட்டிருக்கின்றோம் என்ற மத்திய பாஜக அரசின் செயற்பாடும்; இதற்கு எதிர்பு தெரிவிப்பது போன்ற பாராளுமன்றத்தை முடக்கி நம்பிக்கையில்லா பிரேரணை தடை போட்ட ஜெயலலலிதா இல்லாத ஆனால் வரிக்கு வரி அம்மா ஆட்சி என்று ஆதி இருந்து அந்த தமிழ் நாடு ஆட்சி உறுப்பினர்களின் புராணம் பாடும் செயற்பாடுகள் அதிமுக தமது சுயத்தின இழந்து எவ்வளவோ காலங்கள் ஆகிவிட்டன என்பதையே கோடிட்டு காட்டுகின்றன.

தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்தில் எப்பாடு பட்டாவது தனது ஆட்சி அதிகாரக் காலை நேரடியாகவோ அது முடியாவிட்டால் மறைமுகமாகவோ பதிக்கும் செயற்பாட்டின் ஒரு அங்கமாகவே இது பார்க்கப்பட வேண்டும். எச் ராஜாகளின் பெரியார் சலையை உடைப்போம் என்ற ஏதெச்சாகார பேச்சுகளும் ரத யதாத்திரை செயற்பாடுகளும் இதற்கு வழி வகுத்தும் நிற்கின்றன.
பெரியாரின் பகுத்திறவுக் கோட்பாடும் இதன் செயற்பாடுகளும் சுரண்டலில் ஈடுபட்ட ‘உயர்தட்டு’ சமூக அடுக்காக பார்பனியம் பார்க்கப்பட்டதும் இதன் தொடர்சியாக பார்பனியத்திற்கு எதிரான செயற்பாடும் மக்கள் எழுச்சியும் திராவிடர் கழகங்களாக பல கட்சியாக பிரிந்து நின்றாலும் இன்றும் சாமி கும்பிட்டாலும் பெரியாரிச சிந்தனையின் வெளிப்பாடுகளை தமிழ் நாட்டின் பல்வேறு அடிமட்ட மக்கள் பிரிவினரிடையே ஆழமாக இருப்பதுதான் ஆர்எஸ்எஸ் போன்ற இந்துவத்துவா அமைப்புகள் தமது வேலைகளை தமிழ் நாட்டில் இன்றும் காட்ட முடியாத சூழ்நிலையில் நிலவ காரணமாக இருக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மை.

காவிகளின் சேட்டைகளிலும் ஏனைய வகுப்புவாத சாதி வெறிகளில் விழிப்படைந்த தமிழகம் ஏனைய இந்திய வடமாநிலங்கள் போலன்றி இவற்றில் ‘தெளிவாகவே’ இருக்கின்றது. இது தமிழகத்தின் பலமாக இருப்பது வரவேற்கத்தக்கதாக இருக்கின்றது. மறு புறத்து திராவிட பாரம்பரிய வேர்கள் தம்மை மக்கள் உட்பட யாரும் ஒன்றும் செய்யமுடியாது என்றும் தமக்கான வாக்கு வங்கிகளை இதுவரை அசைக்க முடியவில்லை என்பதனினால் ஏற்பட்ட மமதை தத்தமது ஆட்சிக்காலத்தில் ஊழல் என்று தாராளமாக செய்தே வந்திருக்கின்றன. இன்னும் விசாரிகப்பட வேண்டிய ஊழல் பட்டியல் இருந்து கொண்டும்தான் இருக்கின்றன.

இந்த ஊழல் பட்டியலை தனது கைகளில் வைத்த வண்ணமே மத்திய பாஜக தமிழ் நாட்டின் ஆளும் கட்சி எதிர் கட்சி இரண்டையும் ஒரு எல்லை மீறி தனக்கு எதிராக செயற்படவிடாமல் கடிவாளம் போட்டிருக்கின்றன. இதுவே ஜெயலலிதா போன் ஆளுமை திகிலென மறைந்த பின்பும் அதிமுக பல கூறுகளாக பிரிந்த பின்பும் தன்வசம் 90 இற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை சட்டசபையில் வைத்திருந்தும் ஸ்டாலின் போன்றவர்களால் கூட தமிழ் நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை.

தேசியக் கட்சியான காங்கிரஸ் மூப்பனார் காலத்திற்கு பின்னராக தமிழக ஆதரவு வீழ்ச்சியும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தளம்பல்களும் இதற்கு ஏதுவாக அமைந்துவிட்டன. கருணாநிதி என்ற ஆளுமையின் முதுமையும் இதற்கு முந்திய குடும்ப உறுப்பினர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்ப முடியாத கழுத்து இறுக்கல்களும் இவரகளுடன் இணைந்து பயணித்து தமிழ் நாட்டு அரசியலில் வெளிக்கரமான பாஜக வை முழமையாக அம்பலப்படுத்தி வெற்றி கொள்ள முடியவில்லை. ஆனாலும் இந்திய நாடு முழுவதும் தனது எதேச்சாகார இந்துவத்துவா கொள்கை மூலம் ஆட்சியை நகர்த்த முற்படும் காவிகளை கட்டிற்குள் கொண்டுவர எதிரணிகளை தற்காலிகமாகவேனும் இணைய வைத்திருக்கின்றன. இவற்றையும் மீறி திரிபுரா உட்பட கோவா வரை ஆட்சியை கைப்பற்றி இன்னும் சில மாநிலங்கள்தான் பாக்கி என்று மமதையுடன் பயணப்படும் பாஜக ஆட்சியின் கரங்களை தமிழ் நாட்டிலிருந்து தவிர்க்க பிரயதனப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.

இந்திய நாட்டின் மதச்சார்பற்ற ஆட்சியை நிறுவுதல் என்பதற்காக காங்கிரஸ் இடதுசாரிகள் ஏனைய பிராந்திய கட்சிகள் தமக்கிடையே ஒருமைப்பாட்டுடைய விடயங்களின் அடிப்படையில் இணைந்து செயற்படுதல் பிராந்திய நலன்களில் மட்டும் தமது அரசியை நிறுத்திக்கொள்ளாது செயற்படும் பரந்துபட்ட போக்குமே தமிழ் நாட்டில் காவிகளின் வலிந்த ஆதிகத்தை நிறுத்தி பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகளை தொடர்ந்தும் பேணிப்பாதுகாக்க உதவும்.

(Apr 19, 2018)