தீண்டாமை ஒழிப்புப் போராட்டம்-மந்துவில்(பகுதி 4)

இந்தப் போராட்டமானது பொது இடங்களில் சம உரிமைகோரி நடத்தப்பட்டது.தனிப்பட்ட ரீதியில் யாருடனும் பகை தீர்க்க இல்லை.சாதிவெறியர்கள் பகை தீர்பதிலேயே குறியாக நின்றனர்.எமது கிராமங்களைச் சுற்றி பல கிராமங்களில் தாழ்த்தப்பட்ட சாதியினர் இருந்தனர்.ஆனாலும் பங்குபெற முன்வரவில்லை.தார்மீக ரீதியாக பல பொருளாதார ஒத்துழைப்புகளை மானாவளை பகுதியினர் வழங்கினர்,.கொடிகாம்ம்,மிருசுவில்,வரணி, அல்லாரை, வேம்பிராய் போன்ற இடங்களில் அதிகமாக சிறுபான்மை தமிழர்கள் இருந்தும் ஆதரவளிக்க தயங்கினர்.இதேபோலவே சங்கானையிலும் நடந்தது.அங்கேயும் சங்கானை ஒரு பகுதியினர்,சண்டிலிப்பாய் போன்ற இடங்களின் ஒத்துழைப்பு குறைவாக இருந்தது.நிச்சாம்ம் மட்டும் தனியே களமாடியது.

இப்போராட்ட காலத்தில் இரத்தினத்தை கொலை செய்ய எடுத்த முயற்சிகள் யாவும் தோற்றன.ஒரு தடவை அவர் தென்னைமரத்தில் இருந்தபோது கொல்ல முயற்சித்தனர்.அது ஓரளவ உயரமான மரம்.குதிக்க முடியாது.யாரையும் அழைக்கவும் முடியாத தூரம்.வேறு வழி இல்லை.அவர் கவனிகாத்துபோல் நின்று தென்னை ஓலையின் வழியாக கொலையாளிகள் நடுவே உருவி வீழ்ந்தார்.எல்லோரும் பயந்து அலறி ஓடிவிட்டனர்.

அதன்பின் மிகுந்த எச்சரிக்கையுடன் கைத்துப்பாக்கி சகிதமாக திரிந்தார்.அவரிடம் துணிவு இருந்தபோதும் தன்னை எப்படியும் கொல்வாரகள் என திடகாத்திரமாக நம்பினார்.ஆனால் பயம் அவரை நெருங்கவில்லை.அவரின் வீடு ஊர் எல்லையில் இருந்தபோதும் அங்கேயே உறங்குவார்.சாதிவெறியர் பகுதிக்குள்ளால் தனியாக போய் வருவார்.

(தொடரும்….)

(விஜய பாஸ்கரன்)