துன்பத்தில் உரியும் துரோகிகளிடம் கவனமாய் இருக்கவும்

ஒரு சாண் வயிற்றை நிரப்பிக்கொள்வதற்காக, கையேந்தி நிற்போரை ஏறெடுத்துப் பார்க்கவோ, வீதியோரங்களில் வீழ்ந்து கிடப்போரைக் கைகொடுத்துத் தூக்கிவிடவோ முடியாத நிலைமையொன்றுக்குள், மனங்களை இறுகக் கட்டிப்போட்டு வைத்துவிட்டது இந்தக் கொரோனா வைரஸ்.