” துரோகி”

இன்று புலிகளாற் தொடக்கிவைக்கப்பட்ட” துரோகி” என்ற வார்த்தை சிங்கள. முஸ்லிம், அரசியல்வாதிகளாலும் பாவிக்கப்படுகிறது. ஒருத்தரை அழித்தொழிக்க முதல் “துரோகி” என்ற பதம் பாவிக்கப்படுகிறது. கொலைகளுக்குக் கண்டனம் தெரிவிக்க முடியாத அளவு தமிழ்த் தலைவர்களின் நிலை இருக்கிறது. ஒரு தடவை டக்லஸ் தேவானந்தாவைப் புலிகள் கொலை செய்ய முயற்சித்து தோல்வியடைந்த காலகட்டத்தில் லண்டனுக்கு வந்திருந்த சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் ஏன் நீங்கள் இதுபற்றி கண்டனம் தெரிவிக்கவில்லை என்று கேட்ட போது எங்கள் தலைவர் சம்பந்தர் அமெரிக்காவில் இருக்கிறார். அவர் வந்தபின் அதுபற்றி யோசிப்போம் என்றார். இந்த நிலையில்தான் இன்றைய தலைமைகள் இருக்கின்றன.

(Bazeer Seyed)