தோல்வி அடைவதையே நோக்கமாகக் கொண்ட போலி வேட்பாளர்கள்

(எம்.எஸ்.எம். ஐயூப்)
இதுவரை கால வரலாற்றில், அதிகபட்ச வேட்பாளர்கள் போட்டியிடும் தேர்தலாக, நவம்பர் 16ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தல் அமைகிறது. இத்தேர்தலில் போட்டியிடுவதற்காக 41 பேர் கட்டுப்பணம் செலுத்திய போதும், 35 பேர் மட்டுமே நேற்று முன்தினம் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.