பன்மைத்தேசியமும் இலங்கையும்

(என்.கே. அஷோக்பரன்)

புதிய நாடாளுமன்றத்தில், தமிழ்ப் பிரதிநிதிகளின் ஆரம்பமே பரபரப்பாக அமைந்திருந்தது. சீ.வி.விக்னேஸ்வரன், தமிழ் மொழியை இலங்கையின் சுதேச மொழி என்று விளித்தது, ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியிருந்தது.