பழங்கள்ளின் போதைதர ‘பாட்டனார்’ இருக்கின்றார்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

இலங்கையில் சமாதானத் தூதுவராகப் பணியாற்றிய எரிக் சொல்ஹெய்ம் பங்குபற்றிய, நிகர்நிலை கலந்துரையாடல் ஒன்று, சில வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்றது. ‘தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்’ என்ற அமைப்பு நடத்திய இந்தக் கலந்துரையாடல், ‘இன்றைய பூகோள அரசியல் இயங்குநிலையில் ஈழத்தமிழரின் எதிர்காலம்’ என்ற தலைப்பில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் எரிக் சொல்ஹெய்ம், வி. உருத்திரகுமாரன், ஊடகவியலாளர் ஐயநாதன், பேராசிரியர் கிருஷ்ணா, நெறியாளராக பூகோள அரசியல் ஆய்வாளர் அருண்குமார் ஆகியோர் பங்குகொண்டனர். இந்தக் கலந்துரையாடலை ‘யூடியூப்’பில் பார்வையிட முடியும்.