பெருந்தொற்றுக் காலகட்டத்தில் மொழியுரிமையும் இலங்கையும்

(என்.கே. அஷோக்பரன்)

இலங்கையில் கொரோனா வைரஸின் பரவல்நிலை, அனைத்து மக்களையும் பதற்றம் அடையச் செய்துள்ளது. இந்தப் பெருந்தொற்றுப் பதற்றத்துக்கு, சமூக ஊடகங்கள் பரப்பும் போலிச் செய்திகள், ‘எரியும் நெருப்புக்கு எண்ணை ஊற்றும்’ கைங்கரியத்தைச் செய்கின்றன.