போரில் உயிரிழந்த எமது உறவுகளுக்கு அஞ்சலிகள்.

இது யாரால் ஏற்பட்டது ?

சகோதர படுகொலைகளும், இரு நாடுகளின்
இருபெரும் தலைவர்களான ராஜீவ் காந்தி,
பிரேமதாசா உட்பட, பத்மநாபா
அமிர்தலிங்கம் ,துரையப்பா ,லக்ஸ்மன் கதிர்காமர் , ஆகிய பெரும் தலைவர்களையும்
புலிகள் கொன்றது தான் முள்ளிவாய்க்காலின் அவலத்துக்கு முக்கிய காரணமாகும். மூர்க்கத்தனமாகவும் ,முட்டாள்தனமாகவும் செயல்பட்ட புலிகள் இந்த சகோதரப்படுகொலைகளையும், தலைவர்களையும் கொன்றவுடனே
செத்துவிட்டார்கள்.சாகசத்தை நம்புபவர்களால்நீண்ட தூரம் பயணிக்க முடியாது. புலிகள் காட்டியதும் ஒருசாகசம்தான், அதனால்தான்
புலன் பெயர்ந்த விசுக்கோத்துகள் புலிகளை கண்மூடித்தனமாக ஆதரித்தார்கள்,
எதிர்பார்த்தார்கள் ,நம்பினார்கள்,இறுதியில்
முட்டாள்தனமாக ஏமார்ந்தார்கள்.

இவர்கள்தான் தற்போது போர்க்குற்றங்களைப் பற்றி பேசுகிறார்கள் ,
போர்க் குற்றங்களுக்காக இலங்கை அரசும் இலங்கை ராணுவமும் தண்டிக்கப்பட வேண்டும் என்று கோருகிறார்கள் நல்லது. அதேசமயம், மறுபக்கம் புலிகளும் போர்க் குற்றங்களை இழைத்தவர்கள்தான் அவர்களும் தண்டிக்க படவேண்டும். ஒருபுறம், வெள்ளைக்கொடிகளோடு சரணடைந்த புலித் தலைவர்களைக் கொன்றது குற்றம் இல்லையா என்று இலங்கை ராணுவத்தை நோக்கிக் கேட்பவர்கள் மறுபுறம், பச்சிளம் குழந்தைகளின் கழுத்தில் எல்லாம் சயனைடு குப்பிகளைக் கட்டி ,பெண்களுக்கு வெடிகுண்டுகளை கட்டி அனுப்பிய நீங்கள் உங்கள் உயிரைக் காத்துக்கொள்ள வெள்ளைக்கொடி ஏந்திச் சென்றதும் குற்றம்தானே என்று புலி ஆதரவாளர்களை நோக்கிக் கேட்கும் நெஞ்சுரமும் வேண்டும்.

புலிகள் வன்னியில் காலடி வைக்கும் வரை அமைதி பூங்காவாக இருந்தது வன்னி, இராணுவத்தின் வாசனை அறியாத பூமி வன்னி!
ஆனால் வன்னியில் யுத்தம் நடத்தப் பணத்தைக் கொட்டிக் கொடுத்த விசுக்கோத்துகள்
இன்று இனப்படுகொலை என்று அழுகிறார்கள்!
மக்களை வெளியேற அனுமதித்திருந்தால் அவர்கள் முள்ளிவாய்க்காலில் அகப்பட்டிருக்கமாட்டார்கள், முள்ளிவாய்க்காலின் எல்லையில் சென்று ஆயுதங்களைப் போட்டு காலில் வீழ்ந்தீர்களே
அதை ஏன் முதலில் செய்ய முடியாமல் போனது?
இனப்படுகொலை என ஒப்பாரி வைக்கும் புலன்
பெயர்ன்த விசுக்கோத்துகளே
நீங்கள் கொடுத்த நிதியில் நடந்த யுத்தத்தில்தானே மக்கள் கொல்லப்பட்டார்கள்?ஆகவே இனப்படுகொலையில் உங்களுக்கும் பங்கு உன்டு என்பதை மறந்து விடாதீர்கள்.

நீங்கள் மாத்திரம் ஊரை விட்டு ஓடி வந்து கல்யாணம் கட்டி,பிள்ளைகளை பெற்று ,நல்ல பாடசாலையில் படிக்கவிட்டு ,
பிறந்தநாள் கொண்டாடி சந்தோசமாக இருக்கவேணும், ஊரில் உள்ளவர்களின் கஷ்டப்பட்டவர்களின் பிள்ளைகள் அடிபட்டு சாக வேணும், முதலில் உங்கட பிள்ளைகளை கொண்டு போய் வன்னியில் ஒரு 5 நிமிடம் செருப்பில்லாமல் வெய்யிலில்
நிற்க சொல்லுங்கள் . அப்போதுதான் உங்களுக்கு
போராடி இறந்தவர்களின் அருமை தெரியும் .

இப்படியானவர்களுக்கு அழிவுதான் பிடிக்கும். ஆக்கத்துக்குப் பிடிக்காது. ஆக்கத்துக்கு நிதி கேட்டால் கொடுக்க மாட்டார்கள்
கரும்புலிப் படகு தயாரிக்க காசு கேட்டால் அள்ளிக் கொடுப்பார்கள்
தாய்நாட்டின் விமான நிலையத்தையும் விமானங்களையும் தாக்கி அழித்தால் விருந்து கொண்டாடி மகிழ்வார்கள் ,இலங்கைக்க்குத் திரும்பிப் போனால் உயிராபத்து என்று வழக்காடி விசாக் கிடைத்த பின்னர் சிறிலங்கா விமானத்தில் பயணம் செய்து கட்டுநாயக்காவில் இறங்கி யாழ்ப்பாணம் போய் நல்லூர்த் திருவிழா கொண்டாடுவார்கள்,
இலங்கைக்குப் போட்டு வந்து நாடு அந்த மாதிரி இருக்கெண்டும் சொல்லுவார்கள்.

காணாமல் போனவர்கள் பற்றி பேசவேண்டுமானால் முதலில் புலிகளின் துணுக்காய் சித்திரவதை முகாமில் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் அல்ல ,
முள்ளிவாய்க்கால் முடிவுற்ற இடமே .

சுமார் நாலாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களை அடைத்து வைத்து
அவர்கள் மீது கொடிய சித்திரவதைகளை மேற்கொண்டு
ஏறத்தாழ இரண்டாயிரம் தமிர்களைக் கொலை செய்த புலிகளின் பாரிய சிறைக் கூடம். 28 வருடங்களுக்குப் பின்னர் அந்த இடம். புலிகளால் ஈரக்கமின்றி கொன்று எரிக்கப்பட்ட எமது மக்களுக்கு அங்கு ஒரு நினைவுச் சின்னம் அமைக்கப்பட வேண்டும்.

சர்வாதிகாரி பொல்பொட்டின் சித்திரவதை முகாம்களையே முறியடித்த புலிகளின் துணுக்காய் சித்திரவதை முகாம். அங்கு சிறை வைக்கப்பட்டிருந்த தமிழர்கள் 5000 பேர்புலிகளினால் கொன்று புதைக்கப்பட்டனர்.

துணுக்காய் பாசிஸ புலிகளின் வதை முகாம் பொறுப்பாளன் மல்லி.அங்கே புலிகளின் கைதிகளாக இருந்த 4,200 இற்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டு அடையாளம் தெரியாது புதைக்கப்பட்டார்கள். இவனால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமான இளைஞர்கள். இவனெல்லாம் மாவீரன் ?

ஒரு விடுதலைப் போராட்ட இயக்கமாகத் தொடங்கப்பட்டஅமைப்பு இறுதியில் சொந்த மக்களையே பலி கொண்டமோசமான பயங்கரவாத இயக்கமாகத் தன் கதையை முள்ளிவாய்க்காலில் முடித்துக்கொண்ட வரலாறுதான் புலிகளுடையது.

இன்று புலிகள் அமைப்பு யார்?
உலகின் 40-க்கும்மேற்பட்ட நாடுகளால் தடை விதிக்கப்பட்ட, உலகின் மோசமானபயங்கரவாத அமைப்புகளில் ஒன்றாக முத்திரை குத்தப்பட்ட, முற்றிலும் வலுவிழந்த, கிட்டதட்ட அழிந்தேவிட்டே ஓர் இயக்கம். சரியாக சொன்னால், பல் பிடுங்கப்பட்ட, அடித்து துவைக்கப்பட்ட, கிட்டத்தட்டசெத்தேவிட்ட அனைவராலும் வெறுத்து ஒதுக்கப்பட்ட ஒரு பாம்பு.இவர்களை ஆதரிப்பவர்கள் ஒன்றில் பயந்தாங்கொள்ளிகள் அல்லது அவர்களிடம் இருந்து எதாவது ஒரு வழியில் ஆதாயம் பெறுபவர்கள்.

இன்று புலிகளின் பெயரால் இயங்குபவர்கள்அவர்களுடைய பினாமிகள்; அவர்கள் ஏன் இன்னமும் புலிகளின்பெயரை உச்சரிக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு அதில்ஆதாயம் இருக்கிறது.
இன்னுமொரு பிரபாகரனும், இன்னுமொரு முள்ளிவாய்க்காலும் ,இன்னுமொரு சீமானும்
எமக்கு வேண்டாம்.

ஒருதடவை அமிர்தலிங்கம்
பிரபாகரனை பற்றி இப்படி சொன்னார், “தம்பி பிரபாகரன் தமிழனித்திற்காக சிறுவயதில் இருந்தே போராடுவது வரவேற்கதக்கது, ஆனால் எதனை செய்யவேண்டும், எதனை செய்யகூடாது எனும் அறிவு அவரிடம் இல்லை, பக்குவம் இல்லை, முதிர்ச்சி இல்லை.இவர் இப்படியே செய்துகொண்டிருந்தால் அது பெரும் அழிவில் முடியும், அவர் பின்னால் இளைஞர்கள் செல்வது நல்ல அறிகுறி அல்ல…”
எவ்வளவு அனுபவமான வார்த்தைகள்.

அவ்வளவுதான் ஒரு சுபநாளில், பேச்சுக்கு என சென்ற புலிகள் அவர் வீட்டில், அவர் மனைவி கையாலே தேநீர் குடித்து, அமிர்தலிங்கத்தை கொன்று அவர் தாலி அறுத்தனர், பயிற்சி அப்படி

அமிர்தலிங்கத்தின் வார்த்தைகள் சீமானுக்கும் பொருந்தும் ” அவரின் தமிழின உணர்வு வரவேற்கதக்கது, ஆனால் எதனை பேச வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்ற அறிவோ திட்டமோ ஒன்றும் சீமானிடம்
இல்லை,புலிகள் எவ்வாறு தமிழ் அப்பாவி மக்களை கொண்டு வந்து முள்ளி வாய்க்காலில் விட்டார்களோ , அதை தான்
சீமானும் செய்ய துடிக்கின்றார்.

ஒரு விடயம் மட்டும் இன்னும் சரியாக புரியவில்லை அதாவது ஏழு கோடி தமிழ் மக்கள் உள்ள தனது சொந்த நாட்டில் சீமான்
ஈழம் கேட்காமல் வெறும் ஒரு சில இலச்சங்கள்
தமிழர்கள் மாத்திரமே உள்ள அயல் நாடான இலங்கையில் ஈழம் கேட்பதன் மர்மம் என்ன?
இவர் தடை செய்த பயங்கரவாத இயக்கமான புலியின் கொடியையும் , பிரபாகரனின் படத்தையும் வைத்துதான் அரசியல் செகின்றார்,
அதனால்தான் இவரால் தமில் நாட்டில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை,சீமான் நல்லதொரு பேச்சாளன் அவருடைய பேச்சுக்கள் அபாரம் ஆனால் இலங்கை தமிழர்கள் பற்றி பேசும் போது மிகவும் அபாயகரமாகவுள்ளது.
இது கண்டிப்பாக இன்னுமொரு முள்ளிவாய்க்காலை உருவாக்கும் ஆரம்பமே!

புலன் பெயர்ந்தோர்களே இனிமேலாவது உங்களின் சுயநலமான எண்ணங்களை விட்டுட்டு,
உங்களால் பரிதாப நிலையில் நடுத்தெருவில் நிற்கும் முன்னாள் போராளிகளுக்கு உதவி செய்தாவது நீங்கள் செய்த பாவத்துக்கு பரிகாரம் செய்யுங்கள் ,உதவி செய்ய முடியாவிட்டால் ஒதுங்கி இருங்கள்.

(Sutharsan Saravanamuthu)