மாட்டின் வீதியில் நடந்த கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் கூட்டத்தில்…..

05ம் திகதி மாட்டின் வீதியில் நடந்த கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் கூட்டத்தில் நடந்ததாக கூறப்படும் சில சுவாரசியமான சம்பாசனைகள் :
₹ முல்லைத்தீவில் புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று இரண்டு சபைகளையும் தமிழரசுக்கட்சி தவிர்ந்த எதற்கும் விட்டுக்கொடுக்க முடியாதென்றார் சிவமோகன். அதுகூட பரவாயில்லை. அதற்கு அவர் கொடுத்த விளக்கம்தான் எல்லோரையும் சிரிக்க வைத்தது. “புதுக்குடியிருப்பில் சினிமா நடிகர்களை அழைத்து ஒரு நிகழ்ச்சி நடத்தினேன். பல இலட்சம் செலவானது. நீங்கள் வெல்லவோ நான் காசு செலவழித்தேன்?“ என மற்ற கட்சிகளை பார்த்து கேட்டார்.சிவமோகன் பேச, ரெலோ செயலாளர் சிறிகாந்தா குறுக்கிட்டு- “தம்பி நீங்கள் எந்த கட்சி சார்பில் பேசுகிறீர்கள், ஈ.பி.ஆர். எல்.எவ் இற்கா? தமிழரசுக்கட்சிக்கா?“ என கேட்டார். இதனால் கோபமடைந்த சிவமோகன், ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியை திட்டி தீர்த்தார்.
₹ பின்னர் சாந்தி சிறிஸ்கந்தராசா சொன்னார்- “புதுக்குடியிருப்பை விடமாட்டோம். அது எனது ஐயா பிறந்த இடம். கரைத்துரைப்பற்றையும் விட முடியாது. அது நான் கலியாணம் செய்த இடம்“ என. சீ.வீ.கே தாழ்ந்த குரலில் பக்கத்தில் இருந்தவரிடம் – “இதென்ன பாரதி பாடலா நடக்கிறது? எந்தையும் தாயும் மகிழ்ந்து குழாவிய இடம் என்பதை போல பேசுகிறார்கள்?“ என கேட்டார்.

₹ மன்னார் பேச்சு வந்தபோது. சார்ள்ஸ் நிர்மலநாதன் பேசினார். “மன்னாரில் அனைத்து இடங்களிற்கும் பொது வேட்பாளர் நியமிப்போம். பாதர்களுடனும், சித்தி விநாயகர் கோயில் ஐயருடனும் பேசி பொது வேட்பாளரை நியமிப்போம்“ என்றார். சிவாஜிலிங்கம் சிரித்தபடி “தம்பி… என்ன கிரியையா செய்ய போறியள்? என கேட்டார்.