முள்ளுள்ள புதர்களின் மத்தியில்; அத்தியாயம் 3

(By Terrence Anthonipillai)
வலிகாமத்திலிருந்து வந்த மக்களின் தெகை அதிகரிக்க அதிகரிக்க எமது நிறுவனமும் தனது பணியாட்களின் தொகையை உயர்த வேண்டியிருந்தது. பதவி வெற்றிடங்களை பத்திரிகைகளில் விளம்பரபபடுத்தி விண்ணப்பதாரிகளின் சுயவிபரக்கோவைகளைப் பரிசிலீத்து நேர்முகப்பரீட்சை நடாத்தி பணியாட்களை தெரிவு செய்ய நீண்டநாட்கள் எடுக்கும். எனவே எனக்கு தெரிந்தவர்கள் மூலம் சிலரை நேர்முகப்பரீட்சைக்கு அழைத்திருந்தேன்.