வெள்ளாளர்கள்; யாழ்ப்பாணத்தின் துயரம்

” குவாங்கோ நதியை சீனாவின் துயரம் என்பதுபோல; யாழ்ப்பாணத்தின் துயரம்; யாழ்ப்பாணத்து வெள்ளாளர்” என்பார் நண்பர் ஒருவர். யாழ்ப்பாணத்தில்; பிராமணர்கள் ஆதிக்க சாதி இல்லை என்று பார்த்தோம். ஆனால், பிராமணர்கள் செய்யக் கூடிய கொடுமைகளை; கீழ் ஜாதியினருக்கு வட்டியும் முதலுமாகச் செய்தனர் வெள்ளாளர்கள். உண்மையில் கேரளத்துக்கு நம்பூதிரிகளோ எப்படியோ; யாழ்ப்பாணத்துக்கு வெள்ளாளர்கள் அப்படி.