2019: காலம் கலைத்த கனவு

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
காலம் கனவுகளையும் கற்பனைகளையும் சாத்தியங்களையும் எதிர்பார்ப்புகளையும் தன்னுள் உட்பொதிந்து வைத்திருக்கிறது. காலத்தின் விந்தையும் அதுவே. கடந்தகாலத்தின் மீதான ஏமாற்றங்களும் நிகழ்காலத்தின் மீதான நிச்சயமின்மைகளும் எதிர்காலம் குறித்த எதிர்பார்ப்புகளை உருவாக்கி விடுகிறது. இது புதிதன்று. ஆனால் மனித மனம் நம்பிக்கையென்னும் பிடியை இறுகப் பற்றியபடி நூலில் நடக்கும் ஆபத்தான விளையாட்டில் இறங்கி விடுகிறது. இதன் பலன்கள் நாமறிந்ததே. இதையே கடந்து போகும் இவ்வாண்டும் சொல்லிச் செல்கிறது.