கொரோனாவும்… மீனவர்களும்…. தொலைந்து போன முகமற்றவர்களின் கதை…

கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டு சில நாட்கள் கழித்து யாரையான் சோமேஷ் (வயது 18) என்ற ஆந்திராவைச் சேர்ந்த மீனவ இளைஞர், எந்திர படகு மூலம் மீன்பிடிக்கச் சென்றபோது குஜராத்தின் வெரவாலின் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கடலில் மாட்டிக்கொண்டார். அவர் சென்ற கலத்திலிருந்ததோ (படகு) 500 லிட்டர் தண்ணீர்தான். அதில் அவருக்கு அவருடைய முதலாளியினால் நாளொன்று 8 லிட்டர் தண்ணீர்தான் அளிக்கப்பட்டிருந்தது. அவருடன் மற்ற மீனவர்கள் 50பேர் கலத்தில் இருந்தனர். ஒரு நாள் முழுவதும் அவருடைய அனைத்து தேவைகளுக்கும் அந்த 8 லிட்டர் தண்ணீரைத்தான் பயன்படுத்தியாக வேண்டும். உணவும், முதலாளி அளிக்கும் குறிப்பிட்ட அளவு அரிசிதான் சேமிப்பாக இருந்தது.