தமிழ் நாடு: கேள்வி எழுப்பி நிற்கும் கொலையும், கொலைக்கான தீர்ப்பும்

(சாகரன்)

கடந்த சில தினங்களாக தமிழகத்தில் நடைபெற்ற இரு சம்பவங்கள் என்னிடம் சில கேள்விகளை எழுப்பி நிற்கின்றன.

அமெரிக்காவின் மினிசோடாவில் கறுப்பின இளைஞர் ஜோர்ஜ் புளொயிட் வீதியில் வைத்து வெள்ளையின பொலிஸால் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படமும், காணெளிக் காட்சிகளும் இதனை ஊடகத்துறையும், சமூக ஆர்வலர்களும், ஏன் மனித நேயச் செயற்பாட்டாளர்களும் உலகம் தழுவிய போராட்டமாக மாற்றினர். அப்போது நாம் நம்பிகையை அடைந்திருந்தோம் உலகில் அறம் மீட்கப்பட்டு காக்கப்படும் என்று.