வில்லங்கமான விளையாட்டு

(கே. சஞ்சயன்)
இந்தியா- பாகிஸ்தான் இடையில் நீடித்து வருகின்ற பிரச்சினைகளுக்குள், இலங்கையும் அடிக்கடி சிக்கிக்கொண்டு வருகிறது. இப்போது, கிரிக்கெட் விவகாரத்தால் சர்ச்சை எழுந்திருக்கிறது. இலங்கைக் கிரிக்கெட் அணி, இந்த மாத இறுதியில் பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருந்த நிலையில், இலங்கை அணியின் 10 முன்னணி வீரர்கள் அந்தப் பயணத்தில் இருந்து விலகியுள்ளதுதான் சர்ச்சைகளுக்குக் காரணம்.