16 குளங்கள் கட்டிய கதை

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஆடு மேய்க்கும் முதியவர் ஒருவர் தனது கிராமத்தில் 16 குளங்க ள் அமைத்து அந்தப் பகுதியை பசுமை ஆக்கி உள்ளார். கர்நாடகா மாநிலம் மலவள்ளி தாலுகாவில் அமைந்துள்ள தாசணடோடி என்னும் கிராமம் குந்தினிபெட்டா மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. கடந்த 40 வருடங்களுக்கு முன்பு இந்த இடம் வெறும் பாறைகளாக இருந்தது. மேலும் ஒரே குண்டும் குழியுமாக இருந்தது. மழை பெய்வதே அபூர்வமாகவும் அப்படியே மழை பெய்தாலும் அது உடனடியாக வரண்டு விடுவதுமாக இருந்தது.