அமரர் வி.கே.வெள்ளையனின் நினைவுதினம்…

தொழிலாளர் தேசியசங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.பிலிப் தலைமையில் சங்கத்தின் ஹட்டன் தலைமை காரியலயம், ஹட்டன் ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் கோவில் என்பவற்றில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதுடன், டிக்கோயா தோட்டத்திலுள்ள அன்னரின் சமாதிக்கு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில், தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி பொதுச்செயலாளரும் நோர்வூட் பிரதேச சபை உறுப்பினருமான பி.கல்யாணகுமார், பிரதி நிதிச்செயலாளரும் மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் உட்பட தொழிலாளர் தேசிய சங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.