ஆலாலசுந்தரம் மற்றும் தர்மலிங்கத்தை செல்வம் அடைக்கலநாதனின் உத்தரவில் நானே கொன்றேன்! ஜேர்மனியிலிருந்து TELO உறுப்பினர்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஆலாலசுந்தரம் மற்றும் தர்மலிங்கம் ஆகியோர் 02.09.1985 அன்று தமிழீழ விடுதலை இயக்கம் என்ற ரெலோ அமைப்பினால் கொலை செய்யப்பட்டிருந்தனர். 34 வருடங்களின் பின்னர் தானே இக்கொலைகளை மேற்கொண்டதாக ஜேர்மனியில் வசித்துவரும் மன்மதன் என்பவர் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.