இணைந்து செயற்பட சீனா விருப்பம்

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்க சீனா தயாராக உள்ளதாக இலங்கைக்கான சீன தூதுவர் யீ ஸியாங்லியாங் தெரிவித்துள்ளார். குறிப்பாக கடல் பொருளாதார வளர்ச்சியில் பங்களிப்பை வழங்க சீனா விருப்பத்துடன் உள்ளதாகவும் அவர் கூறிள்ளார். கடந்த 10 வருடங்களில் சுமார் 10,000 இலங்கையர்களை விஞ்ஞானம், முகாமைத்துவம், கலாசாரம் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் சீனா பயிற்றுவித்துள்ளதாகவும் அவர் கூறினார். அத்துடன், 2015ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், சுமார் 1,000 இலங்கையர்களுக்கு சீன அரசாங்கத்தின் நிதியுதவியில் சீனாவில் கற்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.