இலங்கை: கொரனா நிலவரம்

கந்தானையில் உள்ள விகாரையின் பிக்கு ஒருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்த விகாரையைச் சேர்ந்த 14 பிக்குகள் விகாரையிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.  கடந்த வருடம் ஒக்டோபர் 3ஆம் திகதியிலிருந்து இன்று (21) வரையில் கந்தானை பிரதேசத்தில் 415 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கொவிட் 19 தொற்றிலிருந்து 843 பேர் பூரண குணமடைந்து  இன்று(21)  வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய, கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 74,299 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், கொவிட் தொற்றுக்குள்ளான 4,746 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.