ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடை

‘ஈரான் மீது மீண்டும் புதிய பொருளாதாரத் தடை விதிக்கப்படும்’ என, அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே 2018ல் போர்ச் சூழல் மூண்டது. கடந்த ஜனவரி மாதத்தில் ஈரானின் முக்கியப் போர் தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்திக் கொன்றது.