காபந்து அரசாங்கத்தில் தினேஷே பிரதமர்?

இது தொடர்பான கோரிக்கையை, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்களான விமல் வீரவன்சவும் உதய கம்மன்பிலவும் பரிந்துரை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அந்தவகையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தைக் கலைத்து, பொதுத் தேர்தல் நடத்தப்படும் வரையில், தினேஷ் குணவர்தனவே பிரதமராகச் செயற்படுவார் என்றும் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சி வெற்றி​ பெறும் பட்சத்தில், மஹிந்த ராஜபக்‌ஷ, புதிய அரசாங்கத்தின் பிரதமராக நியமிக்கப்படுவார் என்றும், மேற்படித் தகவல்கள் தெரிவிக்கின்றன.