காவத்தையில் கூட்டு மே தினம்

தோட்டத் தொழிலாளர்களின் நாட் சம்பளத்தை 1000/= ஆக உயர்த்து, தோட்டத் தொழிலாளர்களுக்கு காணி உரித்துடன் வீட்டை வழங்கு, அனைவருக்கும் சமமான கல்வியும் இலவசக் கல்வியையும் உறுதி செய், கல்வியில் அரசியல் தலையீட்டை நிறுத்து, ஆசிரிய உதவியாளர்களுக்கு உடனடியாக நிரந்தர நியமனம் வழங்கு, வாழ்கை செவை குறை, தேசிய இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு வழங்கு என்ற கோரிக்கைகளை முன்னிருத்தி மக்கள் தொழிலாளர் சங்கம், மக்கள் ஆசிரியர் சங்கம், இலங்கை கொம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம், மக்கள் பண்பாட்டுக் கழகம் ஆகிய அமைப்புகள் இணைந்து நடாத்தும் கூட்டு மே தினக் கூட்டம் 01.05.2016 அன்று மு.ப. 10 மணிக்கு காவத்தை கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. தமது உறுப்பினர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் ஏனைய உழைக்கும் மக்களுக்கும் அவ் அமைப்புகள் மே தினக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.