கீரிமலை கடற்படை முகாம் அகற்றப்பட்டது

கீரிமலை கேணிக்கு அண்மையிலுள்ள இரண்டு வீடுகளை உள்ளடக்கி அமைக்கப்பட்டிருந்த சிறிய கடற்படை முகாம், திங்கட்கிழமை (12) அகற்றப்பட்டு முகாம் அமைந்திருந்த வீடுகள் அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டன. மேற்படி முகாம் முன்னர் 3 வீடுகளை உள்ளடக்கி அமையப் பெற்றிருந்து. ஒரு வீடு ஏற்கெனவே உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டிருந்தது. மிகுதி 2 வீடுகளும் தொடர்ந்தும் கடற்படை முகாமாகவே இருந்தன. தற்போது கடற்கடை முகாம் முற்றாக அகற்றப்பட்டமையால், 2 வீடுகளும் வலிகாமம் வடக்கு (தெல்லிப்பழை) பிரதேச செயலர் க.ஸ்ரீமோகனனிடம் கையளிக்கப்பட்டது. பிரதேச செயலர் மேற்படி 2 வீடுகளையும் அதன் உரிமையாளர்களிடம் கையளித்தார்.