குடியிருப்பின் மீது மண்மேடு சரிவு

மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக, மேல் கொத்மலை நீர்தேக்க பகுதியின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது, இதனையடுத்து, இன்றைய தினம் மூன்று வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. வான்கதவுகளில் இருந்து அதிகளவில் நீர் வெளியேறும் நிலையில், அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் வசிப்பவர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதேவேளை, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறந்து விடப்பட்டதன் காரணமாக சென்.கிளயார் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது.