குணரத்னத்தை நாடு கடத்தமாட்டோம்

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரத்னத்தை நாடுகடத்த மாட்டோம் என்று தெரிவித்துள்ள அரசாங்கம், ஸ்ரீ லங்கா பிரஜாவுரிமைக்காக விண்ணப்பித்தால், அது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டினார். குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்திட்டங்களை மீறினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர், கேகாலை, அங்குருவெல பகுதியில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.