குமார் குணரத்னத்துக்கு விளக்கமறியல் நீடிப்பு

முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியற் குழு உறுப்பினர் குமார் குணரத்னத்தை எதிர்வரும் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கேகாலை நீதவான் நீதிமன்றம், இன்று (14) உத்தரவிட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறி, நாட்டில் தங்கியிருந்த குற்றச்சாட்டப்பட்டிருந்த இவர், கேகாலை, அருகுருவெல பகுதியில் வைத்து நவம்பர் மாதம் 04 ஆம் திகதியன்று சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு இன்று வரை (14) விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். இதுவரை தொடர்ச்சியாக 151ஆவது நாளாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.