கூட்டணியாகப் போட்டியிட மொட்டு தீர்மானம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் உள்ளிட்ட அனைத்துத் தேர்தல்களின் போதும், கூட்டணியாகப் போட்டியிடுவதற்கு, ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியும் ஒன்றிணைந்த எதிரணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளும் தீர்மானித்துள்ளன. ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர், புதிய கூட்டணியைப் பதிவு செய்வது குறித்துக் கலந்துரையாடப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.