கூட்டமைப்புடன் இணையத் தயார் ஈரோஸ்!

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து, எதிர்காலத்தில் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக, ஈழவர் ஜனநாயக முன்னணி எனப்படும் ஈரோஸ் கட்சியின் தலைவர் ஆர்.பிரபாகரன் தெரிவித்தார். மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிடும் போதே, அவர் இதனை குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில், இன்றைய சூழலில் விரும்பியோ விரும்பாமலோ தமிழ் தேசிய கூட்டமைப்புதான் தமிழ் மக்களின் உண்மையான அடையாளாம். அதன் மூலமாகத்தான் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுபெற முடியும். அதனால்தான் ஈரோஸ் மறுசீரமைப்பு மாநாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து அரசியில் பயணத்தை மேற்கொளவதென முடிவு காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பை தமிழ் மக்கள் பேரவை அல்ல எந்தப் பேரவையாலும் அழிக்க முடியாது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.