சகோதர மொழி அறிவின்மை வெட்கத்துகுரியது

இலங்கையில் வாழும் 21 மில்லியன் மக்கள் பயன்படுத்துதற்காக இரு மொழிகள் மாத்திரமே உள்ள நிலையில் அவற்றை சரிவர அறியாதிருப்பது வெட்கத்துகுரிய காரணமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கல்வி அமைச்சில் நடை​பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

அபிவிருத்தி அடைந்த நாடுகள் தேசமாக ஒன்றிணைந்தன் காரணமாகவே அவர்களின் இலக்குகளை இலகுவாக அடைந்துகொள்வதாகவும், 45 இலட்சத்துக்கும் அதிகமான சிறுவர்களை திறமையானரவர்கள் திறமையற்றவர்கள் என்று பிரிக்காமல் சகலரும் நாட்டின் வளங்கள் என்று கருதப்பட வேண்டியது அவசியமெனவும் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் மொழிக் கையாளுகையின் போது இன ரீதியான வெறுப்புப் பேச்சுகளுக்கு இடமளிக்க தயாரில்லை எனத் தெரிவித்த அவர், சிங்கள மாணவர்களுக்கு தமிழ் மொழியையும், தமிழ் மாணவர்களுக்கு சிங்கள மொழியையும் கற்பிக்க வேண்டியது ​அவசியமெனவும் வலியுறுத்தியுள்ளார்.