சீ.வி.கே.சிவஞானத்திற்கு எதிராக நிதி மோசடி குற்றச்சாட்டு! விசாரணைக்குழு அமைக்க கோரிக்கை!!

வடமாகாணசபையின் பேரவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானத்திற்கு எதிராக சுமார் 14 கோடி ஊழல் குற்றச்சாட்டுக்களினை கூட்டுறவு அமைப்புக்கள் எழுப்பியுள்ளன. யாழ்.மாவட்ட கூட்டுறவு கிராமியப்பணத்தை தனியார் வங்கியொன்றினில் வைப்பிலிட்டதன் மூலம் 13 கோடியே 87இலட்சத்தினை நட்டமாக அடையக்காரணமானதாக கூட்டுறவு அமைப்புக்கள் குற்றஞ்சாட்டியுள்ளன. குறித்த தனியார் வங்கியினில் தனக்கான இலாபத்தை எதிர்பார்த்து பணத்தை வைப்பிலிட்டதாகவும் வங்கி முடக்கநிலையினை அடைந்ததால் வைப்பிலிடப்பட்ட பணம் இழக்கப்பட்டுவிட்டதாகவும் அவை தெரிவித்துள்ளன.இவை தொடர்பினில் விசாரணைகளை மேற்கொள்ளவும் இழக்கப்பட்ட நிதியை மீளப்பெற்று கூட்டுறவு கட்டமப்பினை வளப்படுத்த முன்வரவேண்டுமெனவும் அவை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள்,உறுப்பினர்களை கோரியுள்ளன.