‘சென்னை மக்களுக்கு எனது அனுதாபங்கள்’

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு, இந்தக் கடினமான சந்தர்ப்பத்தில் நாமும் இணைகின்றோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் வலைத்தளத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். சென்னையில், கடந்த சில தினங்களாகப் பெய்த் கடும் மழையால் அங்கு இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிப்படைந்துள்ளதுடன், 269பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.