தமிழர் வரலாற்றைப் பறைசாற்றும் அரும்பொருள் காட்சியகம் யாழ்ப்பாணத்தில் அமைப்பு

யாழ்ப்பாணத்தின் வரலாற்றில் முதன் முறையாக “சிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருள் காட்சியகம்” உருவாக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலான நாவற்குழியில் எதிர்வரும் 25ஆம் திகதி சனிக்கிழமை இந்த அரும்பொருள் காட்சியகம் பொது மக்கள் பார்வைக்காக திறக்கப்படவிருக்கிறது.