தற்கொலைக்கு தூண்டியது எது? – 3 மாணவிகளின் உருக்கமான கடிதம்!

விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள எஸ்.வி.எஸ்.யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்த வந்த மோனிஷா, சரண்யா, பிரியங்கா என்ற மூன்று மாணவிகள், கல்லூரிக்கு அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மாணவிகளின் மரணம். மூன்று மாணவிகளும் தற்கொலைக்கு முன் எழுதியுள்ள கடிதம் தற்போது சிக்கியுள்ளது. இந்த கடிதத்தில், அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், காலேஜில நாங்க படிச்சத விட வேலை பார்த்ததுதான் அதிகம் என்றும் தங்கள் மனவேதனையை வெளிப்படுத்தியுள்ளனர்.

தற்கொலைக்கு முன் அவர்கள் எழுதிய உருக்கமான கடிதம் இதோ…
‘3 மாணவிகளை பலிவாங்கிய எஸ்.வி.எஸ். கல்லூரி அனுமதியின்றியே இயங்கியது’: எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி

3 மாணவிகள் தற்கொலைக்குக் காரணமான கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி, அரசு அனுமதியின்றியே இயங்கி வந்ததாக டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.கீதாலட்சுமி அதிர்ச்சித் தகவல் தெரிவித்துள்ளார்.

எஸ்.வி.எஸ். கல்லூரியின் மோசமான நடவடிக்கையால் மனம் உடைந்த நிலையில், மாணவிகள் பிரியங்கா, மோனிஷா, சரண்யா ஆகிய 3 பேரும் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டனர். இதனையடுத்து அக்கல்லூரிக்கு சீல் வைக்கப்பட்டு அக்கல்லூரியின் முதல்வர் கலாநிதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சென்னையில் இன்று (திங்கள்) செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் எஸ்.கீதாலட்சுமி, “விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இருப்பினும் அந்தக் கல்லூரி இயங்கியுள்ளது.

இது குறித்து விசாரணைக் குழு அமைத்து தகுந்த விசாரணை மேற்கொள்ளப்படும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளிலேயே சேர்க்க வேண்டும்” என்று கூறினார்.

(Vikatan)