தாக்குதலுடன் தொடர்புடைய 89 பேரிடம் ​தொடர்ந்தும் விசாரணை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 89 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களுள் 69 பேர் குற்ற விசாரணைப் பிரிவாலும் 20 பேர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.